தனிமையில் உம்மை ஆராதிக்கிறேன்
தன்னதனியாக ஆராதிக்கிறேன்
எல்லோரும் இருந்த போது ஆராதித்தேனே
யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே
அன்னாளில் தோழரோடு ஆராதித்தேனே
இன்னாளில் தனிமரமாய் ஆராதிக்கிறேன்
சந்தோஷமாய் இருந்த போது ஆராதிக்கிறேன்
சுக்கு நூறாய் உடைந்த போதும் ஆராதிப்பேனே
..தனிமையில்
நிறைவாக வாழ்ந்த போது ஆராதித்தேனே
நிலைமாறி வீழ்ந்த போதும் ஆராதிப்பேனே
சுகத்தோடு வாழ்ந்த போதும் ஆராதிப்பேனே
சுகவீனமான போதும் ஆராதிப்பேனே
..தனிமையில்
நல்லவரே உம்மை ஆராதிக்கிறேன்
நன்றி சொல்ல உம்மை ஆராதிக்கிறேன்
ஆண்டவரே உம்மை ஆராதிக்கிறேன்
ஆறுடலே உம்மை ஆராதிக்கிறேன்
உன்னதரே உம்மை ஆராதிக்கிறேன்
உயிர் உள்ளவரை ஆராதிக்கிறேன்
Thanimaiyil Ummai Aaraathikkiraen Chords for Keyboard, Guitar and Piano