Kaannaatha Aattin Pinnae in A Scale

காணாத ஆட்டின் பின்னே
கர்த்தர் கண்ணீருடன் அலைந்தார்
அன்போடு உன்னை அழைக்கின்றாரே
இன்றே திரும்பி நீ வா
முள்ளும் புதரும் காடும் மலையும்
உள்ளம் உடைந்தேசு தேடுகின்றார்
சிற்றின்ப சேற்றினில் சிக்கினதால்
சாத்தான் வலையில் நீ சிறையாகினாய்
…காணாத
சுத்த இதயம் வேண்டாம் என்றெண்ணி
கர்த்தரின் அன்பை நீ சந்தேகித்தாய்
யோனாவைப் போல நீ போனாயல்லோ
இயேசு பரன் வாக்கு வெறுதாயல்லோ
…காணாத
என்னென்ன துன்பம் தொல்லைகள் வந்தும்
இயேசுவின் பாதை நீ விட்டோடாதே
நீதி நிறைந்த தம் கரங்களை
நீட்டி உன்னை தாங்கி பயம் நீக்குவார்
…காணாத
துன்மார்க்கரெல்லாம் சன்மார்க்கரோடே
தேவ கோபாக்கினையால் மாள்வாரே
கர்த்தரின் பந்தியில் பங்கடைய
கண்ணீருடன் நீயும் அருள் வேண்டுவாய்
…காணாத
எத்தனை நேரம் உன்னை அழைத்தார்
இத்தனை காலம் நீ தள்ளலாமோ
கர்த்தரின் சித்தம் உம் வேளையிதே
கண்டு உணர்ந்து விரைந்தே நீ வா
…காணாத


Kaannaatha Aattin Pinnae Chords for Keyboard, Guitar and Piano

Kaannaatha Aattin Pinnae Chords in A Scale

தமிழ்