சாரோனில் மலரும் ரோஜாப்பூ
கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ
களிப்பினால் எனக்குள் வரும் அன்பு
நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ
பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால்
துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால்
எங்கும் இன்பம் இறைவன் அருளால்
என்றென்றும் பாடி மகிழ்வேன்
உத்தமர் உதடுகள் முத்தமிடுமே
நித்ய உள்ளம் நேசம் தருமே
கர்த்தரின் கரங்கள் கானதிடுமே
நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன்
ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன்
ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன்
ஆருயிர் தலைவா அன்பை நாடினேன்
ஆறுதல் கண்டேனே
உமது நேசம் திராட்சை ரசமே
உமது நாமம் வாசனை தைலமே
உமது உருவம் கிச்சிலி மரமே
அதன் கனி மதுரமே
என் மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம்
மரணத்தைப் போன்று வல்லமையுள்ளதாம்
அவரது நேசம்
Saaronil Malarum Chords for Keyboard, Guitar and Piano