Ummai Aaraathikkinten in C♯ Scale

உம்மை ஆராதிக்கின்றேன்
உம்மை ஆராதிக்கின்றேன்(2)
உணர்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளம் மகிழ்ந்து ஆராதிக்கின்றேன்
உள்ளங்கையில் என்னை மறைத்தவர்
உள்ளமெல்லாம் நன்கு அறிந்தவர்
என்னை என்றும் நடத்தும்
அன்பு இயேசைய்யா
கண்ணீர் நதி என்னில் புரண்டாலும்
முழ்கி நான் போனதில்லை
காரிருளில் நான் நடந்தாலும்
பாதை மாறவில்லை
கர்த்தாவே உந்தன் சத்துவமே
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
கர்த்தாவே உந்தன் சத்துவமே
நித்தமும் தாங்கிட வாழ்வேன்
ஆதியும் அந்தமும் ஆனவரே
அனுகூலம் ஆனவரே
ஆளுகை செய்திடும் என் தேவனே
உம்மை ஆலாபனை செய்கின்றேன்
அந்தி சந்தி மதியானத்திலும்
தியானம் பண்ணி நான் முறையிடுவேன்
என் சத்தம் கேட்பீர் செவி கொடுப்பீர்
என்றென்றும் பதில் தருவீர்
– உம்மை
காலத்தால் மாறாத உம் வாக்குகள்
என் நெஞ்சில் ஆறுதலே
கார்மேகம் போன்ற சோதனையில்
என்னைக் காக்கும் ஆயுதமே
கால்களுக்கு அது தீபமாமே
பாதைக்கு அதுவே வெள்ளச்சமன்றோ
எப்போதும் நடப்பேன் வெளிச்சத்திலே
உம் பாதம் சேருவேன் இயேசைய்யா
– உம்மை


Ummai Aaraathikkinten Chords for Keyboard, Guitar and Piano

Ummai Aaraathikkinten Chords in C♯ Scale

தமிழ்