கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்
…கொல்கதா
மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார்
…கொல்கதா
உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் இரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்
…கொல்கதா
வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை
…கொல்கதா
Kolkathaa Malai Meethilae Chords for Keyboard, Guitar and Piano