கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.
மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே.
அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள்.
அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள்.
வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின் மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை.
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| For | עַל | ʿal | al |
| three | שְׁלֹשָׁה֙ | šĕlōšāh | sheh-loh-SHA |
| transgressions | פִּשְׁעֵ֣י | pišʿê | peesh-A |
| of Israel, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| and for | וְעַל | wĕʿal | veh-AL |
| four, | אַרְבָּעָ֖ה | ʾarbāʿâ | ar-ba-AH |
| I will not | לֹ֣א | lōʾ | loh |
| turn away | אֲשִׁיבֶ֑נּוּ | ʾăšîbennû | uh-shee-VEH-noo |
| the punishment thereof; because | עַל | ʿal | al |
| they sold | מִכְרָ֤ם | mikrām | meek-RAHM |
| the righteous | בַּכֶּ֙סֶף֙ | bakkesep | ba-KEH-SEF |
| for silver, | צַדִּ֔יק | ṣaddîq | tsa-DEEK |
| and the poor | וְאֶבְי֖וֹן | wĕʾebyôn | veh-ev-YONE |
| for | בַּעֲב֥וּר | baʿăbûr | ba-uh-VOOR |
| a pair of shoes; | נַעֲלָֽיִם׃ | naʿălāyim | na-uh-LA-yeem |