Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Proverbs 21:11 in Tamil

Home Bible Proverbs Proverbs 21 Proverbs 21:11

நீதிமொழிகள் 21:11
பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

Tamil Indian Revised Version
பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.

Tamil Easy Reading Version
தேவனைக் கேலிச் செய்கிறவனைத் தண்டித்துவிடு. இதனால் அறிவற்றவர்கள் பாடம் கற்பார்கள். அவர்கள் அறிவாளிகளாகின்றனர். அவர்கள் மேலும் மேலும் அறிவைப் பெறுகின்றனர்.

Thiru Viviliam
⁽ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.⁾

Proverbs 21:10Proverbs 21Proverbs 21:12

King James Version (KJV)
When the scorner is punished, the simple is made wise: and when the wise is instructed, he receiveth knowledge.

American Standard Version (ASV)
When the scoffer is punished, the simple is made wise; And when the wise is instructed, he receiveth knowledge.

Bible in Basic English (BBE)
When the man of pride undergoes punishment, the simple man gets wisdom; and by watching the wise he gets knowledge.

Darby English Bible (DBY)
When the scorner is punished, the simple becometh wise; and when the wise is instructed, he receiveth knowledge.

World English Bible (WEB)
When the mocker is punished, the simple gains wisdom; When the wise is instructed, he receives knowledge.

Young’s Literal Translation (YLT)
When the scorner is punished, the simple becometh wise, And in giving understanding to the wise He receiveth knowledge.

நீதிமொழிகள் Proverbs 21:11
பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
When the scorner is punished, the simple is made wise: and when the wise is instructed, he receiveth knowledge.

בַּעְנָשׁbaʿnošba-NOHSH
לֵ֭ץlēṣlayts
יֶחְכַּםyeḥkamyek-KAHM
פֶּ֑תִיpetîPEH-tee
וּבְהַשְׂכִּ֥ילûbĕhaśkîloo-veh-hahs-KEEL
לְ֝חָכָ֗םlĕḥākāmLEH-ha-HAHM
יִקַּחyiqqaḥyee-KAHK
דָּֽעַת׃dāʿatDA-at

Cross Reference

நீதிமொழிகள் 19:25
பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:13
அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

எபிரெயர் 10:28
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

எபிரெயர் 2:1
ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

1 கொரிந்தியர் 10:6
அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:11
சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:5
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.

நீதிமொழிகள் 18:15
புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.

நீதிமொழிகள் 18:1
பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான்.

நீதிமொழிகள் 15:14
புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.

நீதிமொழிகள் 9:9
ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.

நீதிமொழிகள் 1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

சங்கீதம் 64:7
ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள்.

உபாகமம் 21:21
அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாம் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

உபாகமம் 13:11
இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.

எண்ணாகமம் 16:34
அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.


Tags பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான் ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்
Proverbs 21:11 in Tamil Concordance Proverbs 21:11 in Tamil Interlinear Proverbs 21:11 in Tamil Image