Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 16:29 in Tamil

Home Bible Numbers Numbers 16 Numbers 16:29

எண்ணாகமம் 16:29
சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.

Tamil Indian Revised Version
எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.

Tamil Easy Reading Version
இங்குள்ள மனிதர்கள் மரித்துப்போவார்கள். அவர்கள் சாதாரண ஜனங்களைப் போன்று மரிப்பார்களேயானால் பிறகு கர்த்தர் உண்மையில் என்னை அனுப்பவில்லை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

Thiru Viviliam
எல்லா மனிதரும் சாவதுபோல் இம்மனிதரும் செத்தால் அல்லது எல்லா மனிதருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை அடைந்தால் ஆண்டவர் என்னை அனுப்பியிருக்கவில்லை என்பது பொருள்.

Numbers 16:28Numbers 16Numbers 16:30

King James Version (KJV)
If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then the LORD hath not sent me.

American Standard Version (ASV)
If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then Jehovah hath not sent me.

Bible in Basic English (BBE)
If these men have the common death of men, or if the natural fate of all men overtakes them, then the Lord has not sent me.

Darby English Bible (DBY)
if these men die as all men die, and are visited with the visitation of all men, Jehovah has not sent me;

Webster’s Bible (WBT)
If these men shall die the common death of all men, or if they be visited after the visitation of all men; then the LORD hath not sent me.

World English Bible (WEB)
If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then Yahweh hasn’t sent me.

Young’s Literal Translation (YLT)
if according to the death of all men these die — or the charge of all men is charged upon them — Jehovah hath not sent me;

எண்ணாகமம் Numbers 16:29
சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
If these men die the common death of all men, or if they be visited after the visitation of all men; then the LORD hath not sent me.

אִםʾimeem
כְּמ֤וֹתkĕmôtkeh-MOTE
כָּלkālkahl
הָֽאָדָם֙hāʾādāmha-ah-DAHM
יְמֻת֣וּןyĕmutûnyeh-moo-TOON
אֵ֔לֶּהʾēlleA-leh
וּפְקֻדַּת֙ûpĕquddatoo-feh-koo-DAHT
כָּלkālkahl
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
יִפָּקֵ֖דyippāqēdyee-pa-KADE
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
לֹ֥אlōʾloh
יְהוָ֖הyĕhwâyeh-VA
שְׁלָחָֽנִי׃šĕlāḥānîsheh-la-HA-nee

Cross Reference

1 இராஜாக்கள் 22:28
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

யாத்திராகமம் 20:5
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.

யாத்திராகமம் 32:34
இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.

2 நாளாகமம் 18:27
அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான்.

யோபு 35:15
இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.

பிரசங்கி 3:19
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

ஏசாயா 10:3
விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?

எரேமியா 5:9
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

புலம்பல் 4:22
சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.


Tags சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால் கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்
Numbers 16:29 in Tamil Concordance Numbers 16:29 in Tamil Interlinear Numbers 16:29 in Tamil Image