சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,
சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான்.
தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும்.
வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக் கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கேஒழிய வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்?
இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும்.
அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
| And every | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
| plant | שִׂ֣יחַ | śîaḥ | SEE-ak |
| of the field | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֚רֶם | ṭerem | TEH-rem |
| it was | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
| in the earth, | בָאָ֔רֶץ | bāʾāreṣ | va-AH-rets |
| and every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| herb | עֵ֥שֶׂב | ʿēśeb | A-sev |
| of the field | הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH |
| before | טֶ֣רֶם | ṭerem | TEH-rem |
| it grew: | יִצְמָ֑ח | yiṣmāḥ | yeets-MAHK |
| for | כִּי֩ | kiy | kee |
| the Lord | לֹ֨א | lōʾ | loh |
| God | הִמְטִ֜יר | himṭîr | heem-TEER |
| had not | יְהוָ֤ה | yĕhwâ | yeh-VA |
| caused it to rain | אֱלֹהִים֙ | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| upon | עַל | ʿal | al |
| the earth, | הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| and there was not | וְאָדָ֣ם | wĕʾādām | veh-ah-DAHM |
| a man | אַ֔יִן | ʾayin | AH-yeen |
| to till | לַֽעֲבֹ֖ד | laʿăbōd | la-uh-VODE |
| אֶת | ʾet | et | |
| the ground. | הָֽאֲדָמָֽה׃ | hāʾădāmâ | HA-uh-da-MA |