யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான்.
அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது.
ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்.
இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.
| And they called | וַיִּקְרְא֤וּ | wayyiqrĕʾû | va-yeek-reh-OO |
| unto | אֶל | ʾel | el |
| Lot, | לוֹט֙ | lôṭ | lote |
| and said | וַיֹּ֣אמְרוּ | wayyōʾmĕrû | va-YOH-meh-roo |
| unto him, Where | ל֔וֹ | lô | loh |
| are the men | אַיֵּ֧ה | ʾayyē | ah-YAY |
| which | הָֽאֲנָשִׁ֛ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| came in | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| to | בָּ֥אוּ | bāʾû | BA-oo |
| thee this night? | אֵלֶ֖יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| bring them out | הַלָּ֑יְלָה | hallāyĕlâ | ha-LA-yeh-la |
| unto | הֽוֹצִיאֵ֣ם | hôṣîʾēm | hoh-tsee-AME |
| us, that we may know | אֵלֵ֔ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| them. | וְנֵֽדְעָ֖ה | wĕnēdĕʿâ | veh-nay-deh-AH |
| אֹתָֽם׃ | ʾōtām | oh-TAHM |