ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாயிருந்தான்.
அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான்.
அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான்.
அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள்.
அகிலுூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது.
ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான்.
யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.
நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும்,
சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.
சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.
| And Cain | וַיֵּ֤דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | קַ֙יִן֙ | qayin | KA-YEEN |
| אֶת | ʾet | et | |
| his wife; | אִשְׁתּ֔וֹ | ʾištô | eesh-TOH |
| and she conceived, | וַתַּ֖הַר | wattahar | va-TA-hahr |
| and bare | וַתֵּ֣לֶד | wattēled | va-TAY-led |
| אֶת | ʾet | et | |
| Enoch: | חֲנ֑וֹךְ | ḥănôk | huh-NOKE |
| and he builded | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| a city, | בֹּ֣נֶה | bōne | BOH-neh |
| and called | עִ֔יר | ʿîr | eer |
| the name | וַיִּקְרָא֙ | wayyiqrāʾ | va-yeek-RA |
| of the city, | שֵׁ֣ם | šēm | shame |
| after the name | הָעִ֔יר | hāʿîr | ha-EER |
| of his son, | כְּשֵׁ֖ם | kĕšēm | keh-SHAME |
| Enoch. | בְּנ֥וֹ | bĕnô | beh-NOH |
| חֲנֽוֹךְ׃ | ḥănôk | huh-NOKE |