தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது.
பிள்ளைகளே, நீங்கள் தேவனாலுண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.
தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.
அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம்.
தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.
நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்.
தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.
| And Cain | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| talked | קַ֖יִן | qayin | KA-yeen |
| with | אֶל | ʾel | el |
| Abel | הֶ֣בֶל | hebel | HEH-vel |
| his brother: | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| and it came to pass, | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| when they were | בִּהְיוֹתָ֣ם | bihyôtām | bee-yoh-TAHM |
| in the field, | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| that Cain | וַיָּ֥קָם | wayyāqom | va-YA-kome |
| rose up | קַ֛יִן | qayin | KA-yeen |
| against | אֶל | ʾel | el |
| Abel | הֶ֥בֶל | hebel | HEH-vel |
| his brother, | אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO |
| and slew him. | וַיַּֽהַרְגֵֽהוּ׃ | wayyahargēhû | va-YA-hahr-ɡAY-hoo |