1 ⁽ஓபதியா கண்ட காட்சி: தலைவராகிய␢ ஆண்டவர் ஏதோமைக் குறித்து␢ இவ்வாறு சொல்கின்றார்:␢ “விழித்தெழுங்கள்,␢ ஏதோமுக்கு எதிராகப்§போருக்குப் புறப்பட்டுச் செல்வோம்!”␢ என்று அறிவிக்கத்␢ தூதன் ஒருவனை␢ வேற்றினத்தாரிடையே␢ ஆண்டவர் அனுப்பினார், என்பதாக␢ ஆண்டவரிடமிருந்து வந்த␢ செய்தி ஒன்றை நாம் கேட்டிருக்கிறோம்.⁾

2 ⁽நான் உன்னை மக்களினத்தாரிடையே␢ சிறுமைக்குள்ளாக்குவேன்;␢ நீ பெரும் நிந்தைக்கு ஆளாக்கப்படுவாய்.⁾

3 ⁽பாறை இடுக்குகளில் வாழ்பவனே! § உயரத்திலே குடியிருப்பை␢ அமைத்திருப்பவனே!␢ ‘என்னைத் தரை மட்டும்␢ தாழ்த்தக் கூடியவன் யார்?’ என␢ உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே!␢ உன் இதயத்தின் இறுமாப்பு § உன்னை ஏமாற்றிவிட்டது.⁾

4 ⁽நீ கழுகைப் போல்␢ உயர உயரப் பறந்தாலும்,␢ விண்மீன்கள் நடுவில்␢ உன் கூட்டை அமைத்தாலும்,␢ அங்கிருந்தும் உன்னைக்␢ கீழே விழச் செய்வேன், § என்கிறார் ஆண்டவர்.⁾

5 ⁽உன்னிடம் திருடர்கள்␢ வருவார்களாயின்,␢ கொள்ளைக்காரர்கள்␢ இரவில் வருவார்களாயின்␢ தங்கள் தேவைக்கு அதிகமாகத்␢ திருடுவார்களோ?␢ திராட்சைப் பழம் பறிக்கின்றவர்கள்␢ உன்னிடம் வந்தால்␢ திராட்சைப் பழங்களில்␢ சிலவற்றையாவது␢ விட்டுவைக்க மாட்டார்களா?␢ நீயோ வெனில்␢ முற்றிலுமாய்ச் சூறையாடப்பட்டாய்!⁾

6 ⁽ஏசா எவ்வளவாய்க்␢ கொள்ளையடிக்கப்பட்டான்!␢ மறைத்து வைக்கப்பட்ட␢ அவனுடைய கருவூலங்கள்␢ சூறை யாடப்பட்டன.⁾

7 ⁽உன்னோடு உடன்படிக்கை␢ செய்தவர்கள் யாவரும்␢ உன்னை ஏமாற்றி விட்டார்கள்;␢ அவர்கள் உன்னை␢ நாட்டின் எல்லைவரை␢ விரட்டி விட்டார்கள்;␢ உன்னோடு உறவாடியவர்கள்␢ உனக்கு எதிராய் எழும்பி␢ உன்னை மேற்கொண்டார்கள்;␢ உன்னோடு உண்டவர்களும்␢ நல்லுறவு கொண்டிருந்தவர்களும்␢ உனக்குக் கண்ணி வைத்தார்கள்;␢ உன்னைக் குறித்து␢ ‘அவனுக்கிருந்த அறிவுக்கூர்மை § எங்கே?’ என்றார்கள்.⁾

8 ⁽அந்நாளில் நான்␢ ஏதோமிலுள்ள ஞானிகளையும்␢ ஏசாவின் மலைமேல் உள்ள␢ அறிவாளிகளையும்␢ அழிக்காமல் விடுவேனா?␢ என்கிறார் ஆண்டவர்.⁾

9 ⁽தேமான்! வலிமைமிக்க உன் வீரர்கள்␢ திகிலடைவார்கள்;␢ ஆதலால் ஏசாவின்␢ மலைமேல் உள்ள யாவரும்,␢ வெட்டி வீழ்த்தப்பட்டு மடிவார்கள்.⁾

10 ⁽உன் சகோதரன் யாக்கோபுக்கு எதிராக § நீ செய்த கொடுமையை முன்னிட்டு,␢ நீ வெட்கி நாணுவாய்.␢ நீ என்றுமே இல்லாது ஒழிந்து போவாய்.⁾

11 ⁽அயல் நாட்டார் § யாக்கோபின் செல்வத்தைக்␢ கொள்ளையிட்ட அந்நாளில் —␢ வெளிநாட்டார்␢ அவன் வாயில்களுக்குள் புகுந்து␢ எருசலேமுக்காகத் தங்களுக்குள்␢ சீட்டுப்போட்ட அந்நாளில் —␢ நீ விலகி நின்று␢ அவர்களுள் ஒருவனாக இருந்தாயே!⁾

12 ⁽நீ உன் சகோதரனுடைய␢ நாளைக் கண்டு,␢ அவனுடைய வேதனை␢ நாளைக் கண்டு␢ மகிழ்ச்சியடையாது␢ இருந்திருக்க வேண்டும்;␢ யூதாவின் மக்களைப் பார்த்து␢ அவர்களின் அழிவு நாளில்␢ களிப்படையாது␢ இருந்திருக்க வேண்டும்;␢ அவர்களின் துன்ப நாளில்␢ இறுமாப்படையாது § இருந்திருக்க வேண்டும்;⁾

13 ⁽என் மக்கள் துன்புற்ற நாளில்,␢ அவர்களுடைய வாயில்களுக்குள்␢ நுழையாது இருந்திருக்கவேண்டும்;␢ அவர்கள் கேடுற்ற நாளில்,␢ அவர்களின் அழிவைக் குறித்து␢ மகிழ்ச்சியடையாது § இருந்திருக்க வேண்டும்.␢ அவர்கள் அழிவுற்ற நாளில்,␢ அவர்களின் பொருள்களைக்␢ கொள்ளையடிக்காது␢ இருந்திருக்க வேண்டும்.⁾

14 ⁽அவர்களுள் தப்பி ஓடியவர்களை␢ வெட்டி வீழ்த்தும்படி␢ வழிச் சந்துகளில் பதுங்கியிராது␢ இருந்திருக்க வேண்டும்;␢ அவர்கள் துயருற்ற நாளில்,␢ அவர்களில் எஞ்சியோரைக்␢ காட்டிக் கொடுக்காது␢ இருந்திருக்க வேண்டும்.⁾

15 ⁽ஏனெனில், ஆண்டவரின் நாள்␢ வேற்றினத்தார் எல்லார் மேலும் § வரப்போகின்றது;␢ நீ செய்ததுபோலவே␢ உனக்கும் செய்யப்படும்;␢ நீ செய்த வினைகள்␢ உன் தலைமேலேயே விழும்.⁾

16 ⁽என் திரு மலையில்,␢ நீங்கள் என் தண்டனையாகிய␢ பானத்தைக் குடித்தது போலவே␢ வேற்றினத்தார் அனைவரும் § குடிப்பார்கள்.␢ மேலும்குடிப்பார்கள்,␢ குடித்துக் கொண்டே இருப்பார்கள்;␢ குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.⁾

17 ⁽ஆனால், தப்பிப் பிழைத்தோர்␢ சீயோன் மலையில் இருப்பர்;␢ சீயோன் மலையும்␢ தூய்மையாய் இருக்கும்;␢ யாக்கோபின் குடும்பத்தார்␢ தங்கள் உரிமைச் சொத்தைத்§திரும்பப் பெறுவர்.⁾

18 ⁽யாக்கோபின் குடும்பத்தார்␢ நெருப்பாய் இருப்பர்;␢ யோசேப்பின் குடும்பத்தார்␢ தீப்பிழம்பாய் இருப்பர்;␢ ஏசாவின் குடும்பத்தாரோ␢ வைக்கோலாய் இருப்பர்;␢ அவர்கள் இவர்களைத்␢ தீக்கிரையாக்கி␢ முற்றிலும் அழித்து விடுவார்கள்;␢ ஏசாவின் குடும்பத்தாருள்␢ எவருமே தப்பமாட்டார்;␢ ஆண்டவரே இதைக் கூறினார்.⁾

19 ⁽நெகேபில் இருப்பவர்கள்␢ ஏசாவின் மலையைத்␢ தமதாக்கிக் கொள்வார்கள்.␢ செபேலாவைச் சார்ந்தவர்கள்␢ பெலிஸ்தியர் நாட்டை␢ உரிமையாக்கிக் கொள்வார்கள்.␢ அவர்கள் எப்ராயிம்,␢ சமாரியா நாடுகளைத்␢ தம் உடைமையாக்கிக் கொள்வார்கள்;␢ பென்யமினோ␢ கிலயாதைத்␢ தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வான்.⁾

20 ⁽இஸ்ரயேலிலிருந்து␢ நாடுகடத்தப்பட்ட வீரர்கள்␢ திரும்பி வந்து␢ பெனீசியாவிலிருந்து␢ சாரிபாத்து வரை உள்ள நாட்டை␢ உரிமையாக்கிக் கொள்வர்;␢ எருசலேமிலிருந்து செபராதுக்கு␢ நாடுகடத்தப்பட்டோர்␢ நெகேபின் நகர்களைச்␢ சொந்தமாக்கிக் கொள்வர்.⁾

21 ⁽விடுதலை பெற்றோர்*␢ ஏசாவின் மலையை ஆளுவதற்குச்␢ சீயோன் மலைமேல் ஏறுவர்;␢ அரசாட்சி ஆண்டவருக்கே உரித்தாகும்.⁾

Obadiah 1 ERV IRV TRV